
Trust & Safety
UPI மூலம் பணம் பெற்று, கையில் கேஷ் கொடுக்கும் மோசடி – ஏன் இதிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
PhonePe Regional|3 min read|11 September, 2026
நீங்கள் ஒரு கடை வைத்திருந்தால், “சில்லறை வேண்டும்” என்று கேட்கும் வாடிக்கையாளர்கள் உங்களுக்குத் தெரிந்திருப்பார்கள். ஆனால் இப்போது இது ஒரு புதிய ரூபத்தில், டிஜிட்டல் வடிவில் நடக்கிறது. சிலர், “நான் UPI-ல் பணம் அனுப்புகிறேன், எனக்குக் கையில் ரொக்கம் கொடுங்கள்” என்று கேட்பார்கள். இது சாதாரணமாகத் தெரிந்தாலும், இதில் பெரிய ஆபத்து இருக்கிறது. இந்த மோசடி எப்படி நடக்கிறது மற்றும் உங்கள் கடையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த வலைப்பதிவு மோசடி செய்பவர்கள் இந்த மோசடி முறையை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதையும், நீங்கள் உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதையும் தெளிவாக விளக்குகிறது.
உங்கள் வணிகத்திற்கான UPI
ஆன்லைனில் பணத்தை வாங்கிவிட்டு கையில் கேஷ் கொடுக்கும் மோசடி பற்றிப் பார்ப்பதற்கு முன், PhonePe Business பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்:
ஒரு வணிகராக, நீங்கள் இதைப் பரிதாபத்தாலோ அல்லது வணிக நலன்களுக்காகவோ செய்யலாம், ஆனால் இத்தகைய செயல்பாடுகளுடன் பல அபாயங்கள் உள்ளன. QR குறியீடுகள் மூலம் பணம் பெறுவது உடனடி மற்றும் பாதுகாப்பானது என்று தோன்றினாலும், வணிக முனையங்களைத் தவறாகப் பயன்படுத்துவது வங்கிக் கணக்கு முடக்கம், நிதி இழப்பு மற்றும் கடுமையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
வணிகர்கள் தங்கள் பொருட்கள் அல்லது சேவைகளுக்குப் பதிலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்காக, PhonePe பிரத்யேக QR கோடுகளை வழங்குகிறது. இது அனுமதிக்கப்பட்ட முறையான வியாபார நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். இருப்பினும், கையில் ரொக்கப் பணம் கொடுத்துவிட்டு, QR கோடு மூலம் ஆன்லைனில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் பணத்தை நேரில் ரொக்கப் பணமாக மாற்றித் தர QR கோடைப் பயன்படுத்தும் இந்த முறைக்கு QR for ATM services என்று பெயர்.
ஒரு கடைக்காரராக நீங்கள் உதவி செய்யும் எண்ணத்திலோ அல்லது வியாபார நலன் கருதியோ இதைச் செய்தாலும், இதில் பல பெரிய ஆபத்துகள் ஒளிந்துள்ளன. QR கோடு மூலம் பணத்தைப் பெறுவது உடனுக்குடனும் பாதுகாப்பாகவும் தோன்றினாலும், உங்கள் வணிகக் கணக்கை தவறான வழியில் பயன்படுத்தினால் வங்கி கணக்குகள் முடக்கப்படலாம், பண இழப்பு ஏற்படலாம், கடுமையான சட்டச் சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்.
ஆன்லைனில் பணத்தை கொடுத்து ரொக்கப் பணமாக மாற்றி ஏமாற்றும் மோசடி எப்படி நடக்கிறது?
ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வருகிறார். அவர் மிகவும் அவசரத்தில் இருப்பது போலவும், உடனடியாக ₹5,000 ரொக்கப் பணம் தேவைப்படுவதாகவும் கூறுகிறார். அதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை உங்கள் UPI கணக்கிற்கு உடனே அனுப்பிவிடுவதாகவும், நீங்கள் செய்யும் இந்த உதவிக்குச் சிறிய தொகையைக் “கமிஷனாக” தருவதாகவும் கூறுகிறார். நீங்களும் நல்ல எண்ணத்தோடு, “எப்படியும் நமக்கு ஆன்லைனில் பணம் வந்துவிட்டது, நாமும் வங்கிக்குச் சென்று டெபாசிட் செய்ய வேண்டிய வேலை மிச்சம், அதோடு கமிஷனும் கிடைக்கிறதே” என்று நினைத்து, அவர் கேட்கும் ரொக்கப் பணத்தைக் கொடுத்துவிடுகிறீர்கள்.
மோசடி செய்பவர் உங்களை எப்படி ஏமாற்றுவார்
காட்சி 1: மோசடி செய்பவர் ஒரு போலியான பேமண்ட் ஆப் மூலம் ₹5,000 பணத்தை அனுப்புவது போல் நடித்து, போலியான பேமண்ட் உறுதிப்படுத்தல் திரையைக் காண்பிப்பார். அந்தப் பணத்திற்குப் பதிலாக உங்களிடமிருந்து ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவசரமாகச் சென்றுவிடுவார். பிறகு, கணக்கைச் சரிபார்க்கும்போதுதான் பணம் எதுவுமே வரவில்லை என்பதும், நீங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவரும்.
காட்சி 2: மோசடி செய்பவர் உண்மையிலேயே UPI மூலம் ₹5,000 பணத்தை அனுப்பி, உங்களிடமிருந்து ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்வார். ஆனால், நீங்கள் பணத்தைக் கையில் கொடுத்தீர்கள் என்பதற்கான டிஜிட்டல் சான்று உங்களிடம் இல்லாததால், அவர் சார்ஜ்பேக் கோரலாம். இந்த சார்ஜ்பேக் தொடர்பான விசாரணை முடியும் வரை — அதற்கான சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்கும் வரை — உங்கள் கணக்கு முடக்கப்படலாம் அல்லது கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம். இது நேரடியாக உங்கள் வணிகத்திற்கும் நிதி நிலைமைக்கும் இழப்பை ஏற்படுத்தும்.
காட்சி 3: மோசடி செய்பவர் திருடப்பட்ட கிரெடிட் கார்டு, ஹேக் செய்யப்பட்ட RuPay-UPI கணக்கு அல்லது சைபர் குற்றப் பாதிக்கப்பட்டவரின் பணத்தைப் பயன்படுத்தி அந்த QR ஸ்கேன் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்தால், உங்களின் வணிகக் கணக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றத்துடன் தொடர்புபடுத்தப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் உதவிய வாடிக்கையாளர் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு அழைத்து புகார் அளித்தாலோ அல்லது சர்ச்சை எழுப்பினாலோ, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் MHA வழிகாட்டுதல்களின் கீழ் காவல்துறை விசாரணை நடத்தக்கூடும். விசாரணை முடியும் வரை உங்கள் வணிகக் கணக்கு முடக்கப்படலாம். இதனால், அறியாமலேயே ஒரு மோசடியில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடும்; இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் உங்கள் வணிகத்தைப் பாதிக்கலாம்.
நல்ல செய்தி என்னவென்றால், சில எளிய பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மூன்று சூழ்நிலைகளிலிருந்தும் நீங்கள் தப்பிக்க முடியும்.
பணம் வாங்கி, கையில் ரொக்கம் கொடுக்கும் மோசடியை தவிர்ப்பது எப்படி?
உங்கள் வணிகச் செயல்பாடுகள் பாதுகாப்பாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய, RBI வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம். இந்த முறைகள் உங்கள் வணிகத்தை சீராக நடத்த உதவும்.
1. வணிகப் பரிவர்த்தனைகளை வணிகத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள்
உங்கள் வணிகக் கணக்கு என்பது உங்கள் வணிகச் செயல்பாடுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். நீங்கள் வழங்கும் உண்மையான பொருட்கள் அல்லது சேவைகளுக்குப் பணம் பெறுவதற்கு மட்டுமே இதைப் பயன்படுத்துங்கள்.
- பணப் பரிமாற்றங்களைத் தவிர்க்கவும்: ஒரு வணிகராக, உண்மையான விற்பனையைத் தவிர வேறு எதற்காகவும் உங்கள் வணிகக் கணக்கு மூலம் பணத்தைப் பெறுவதையோ அல்லது அனுப்புவதையோ செய்யக்கூடாது.
- உங்கள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: வணிக நோக்கங்களுக்காக மட்டுமே பணப் பரிமாற்றங்களை ஏற்க வேண்டும் என்று உங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
- வெளிப்படைத்தன்மையைப் பராமரியுங்கள்: தேவையில்லாத சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஒவ்வொரு பரிவர்த்தனையையும் நோக்கத்துடனும் வெளிப்படையாகவும் வைத்திருங்கள்.
2. ATM சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றத்தைத் தவிர்க்கவும்.
PhonePe வணிகர்கள் ATM சார்ந்த சேவைகளையோ அல்லது பணப் பரிமாற்றங்களையோ செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஏன்?: வணிகக் கணக்கு மூலம் பணத்தை எடுப்பது அல்லது மாற்றுவது ஆகியவை விதிமுறை மீறல்கள் மற்றும் பரிவர்த்தனை பொறுப்புக்கூறல் இழப்பு உள்ளிட்ட கணிசமான அபாயங்களை உருவாக்குகின்றன.
- விளைவு: வணிகர் கொள்கையின் வரம்பிற்குள் வராத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, நமது தளத்தின் நம்பிக்கையை பாதிக்கும். எனவே, இந்தக் கொள்கையை மீறினால் வணிகர் கணக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது நிரந்தரமாக முடக்கப்படலாம்.
3. உங்கள் சொந்த சாதனத்தில் மட்டுமே பேமண்ட்களை உறுதிப்படுத்துங்கள்
மோசடி செய்பவர்கள் போலியான ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் பேமன்ட் உறுதிப்படுத்தல் திரையை உருவாக்கி ஏமாற்றுவதில் வல்லவர்கள். இதுபோன்ற மோசடிகளுக்குப் பலியாவதைத் தவிர்க்க, உங்கள் சொந்த சாதனத்தில் பணப் பரிவர்த்தனை ரசீதை எப்போதும் சரிபார்க்கவும். உங்களிடம் காட்டப்படும் ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது பாப்-அப்களை நம்ப வேண்டாம். உங்கள் சொந்த PhonePe ஆப்-ஐ சரிபார்க்கவும் அல்லது பணம் வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் SMS அல்லது வங்கி அறிவிப்புகள் வரும் வரை காத்திருக்கவும்.
மோசடிக்கு ஆளானால் என்ன செய்வது
நீங்கள் ஒரு மோசடிக்கு இலக்காகியிருப்பதாகச் சந்தேகித்தால், உடனடியாகப் புகாரளிக்கவும். ஒவ்வொரு நொடியும் முக்கியமானது.
PhonePe-வில் புகாரளிக்க:
- PhonePe Business ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 080-68727374 / 022-68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
- உள்நுழைவு தொடர்பான சிக்கல்கள்: https://support.phonepe.com/ வழியாக ஒரு டிக்கெட்டை பதிவு செய்யவும்.
- சோஷியல் மீடியா புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளித்தல்:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
