
Trust & Safety
கிஃப்ட் கார்டு மோசடி: உங்கள் தகவலை எப்போது பகிர வேண்டும் என்பது பற்றி அறிக
PhonePe Regional|2 min read|20 May, 2025
நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தால், வழக்கமாக அதை எப்படிச் செய்வீர்கள்? பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் UPI அல்லது வங்கி பரிமாற்றம் மூலம் பணம் செலுத்துகிறீர்கள், இல்லையா? கிஃப்ட் கார்டு மூலம் பணம் செலுத்தச் சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
முன்னோட்டம்:
இன்று, கிஃப்ட் கார்டுகள் – குறிப்பாக இ-கிஃப்ட் கார்டுகள், பிறந்தநாள், கல்யாணம் மற்றும் கடைசி நிமிட பரிசுகளுக்கான ஒரு பரவலான தேர்வாக மாறிவிட்டன. ஆனால், இந்த கார்டுகள் பெரும்பாலும் அனாமதேயமாக (அடையாளம் காண முடியாத வகையில்) இருப்பதால், மற்றும்ஒருவரிடம் நிரந்தரமாக இணைக்கப்படுவதில்லை என்பதால், இது மோசடிக்காரர்களுக்கான ஓர் வாயிலாக மாறுகிறது. அவர்கள் இந்த கிஃப்ட் கார்டுகளை ஒரு ஏமாற்று கருவியாக மாற்றி, சாதாரண மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றனர்.
இந்தக் கட்டுரையில், கிப்ட் கார்ட் மோசடி என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது, மற்றும் உங்களை பாதுகாப்பது எப்படி என்பதனை பார்க்கலாம்.
இந்த வகை மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இது எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வது, உங்கள் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்க உதவும்.
கிஃப்ட் கார்ட் மோசடி என்பது என்ன?
கிஃப்ட் கார்ட் மோசடியில், ஒரு மோசடியாளர் மோசடிக்கு இலக்கான நபரை ஏமாற்றி கிஃப்ட் கார்டுகளை வாங்கச் செய்வார். பின்னர் மோசடி செய்பவர்கள் ஏமாற்றி பொய்யான காரணத்தை சொல்லி அந்த கார்டின் நம்பர், PIN, குறியீடு, பின் உள்ளிட்ட விவரங்களை கேட்கிறார். அவற்றைப் பெற்றவுடன், உடனே அதை ரீடீம் செய்து விடுகிறார். இது நடந்தவுடன், பாதிக்கப்பட்ட நபர் பணத்தை மீட்டெடுப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.
கிப்ட் கார்ட் மோசடி எப்படி வேலை செய்கிறது?
கிஃப்ட் கார்டு மோசடிகள் பொதுவாக ஒரு முறையைப் பின்பற்றுகின்றன. மோசடிக்காரர்கள் அதை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதற்கான விளக்கம் இதோ.
1. மோசடிக்காரர் நம்பிக்கைக்குரிய ஒருவர் போல் நடிக்கிறார்
மோசடி ஒரு ஃபோன் அழைப்பு, மின்னஞ்சல், செய்தி அல்லது சமூக ஊடகங்களில் ஒரு நேரடி செய்தி (DM) மூலம் துவங்கும். மோசடிக்காரர் கீழ்காணும் நபர்களாக நடிக்கக்கூடும்:
- உங்கள் மேனேஜர் அல்லது சக ஊழியர்
- நெருக்கடியான சூழ்நிலையிலுள்ள குடும்ப உறுப்பினர்
- ஒரு அரசு நிறுவனத்தினர்
- ஒரு தொழில்நுட்ப ஆதரவு பிரதிநிதி
- உங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நியமன அதிகாரி
2. அவசரம் போல அழுத்தம் தருவது:
மோசடிக்காரர்கள், நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பயமும் அழுத்தமும் ஏற்படுத்தும் உளவுத்தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்லும் சாதாரணமான ஏமாற்று கதைகள் பின்வருமாறு இருக்கும்:
- “நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன். இந்த கிஃப்ட் கார்டுகள் எனக்கு அவசரமாக தேவைப்படுகின்றன.”
- “உடனே பதிலளிக்காவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.”
- “சட்ட சிக்கல் உள்ளது – கிப்ட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும்.”
- “உங்கள் ஆன்போர்டிங்கை முடிக்க எங்களுக்கு இது தேவை.”
3. கிஃப்ட் கார்டுகளை வாங்கச் சொல்வது
உங்களை குறிப்பிட்ட வகையான கிஃப்ட் கார்டுகளை (PhonePeEGC, QWIKCILVERGC, Amazon, Apple, Google Play ஆகியவை) வாங்குமாறு கூறப்படும், மேலும் சில சந்தர்ப்பங்களில் அதிக மதிப்புள்ள பல கார்டுகளையும் வாங்கச் சொல்வார்கள்.
4. கார்டின் விவரங்களை கேட்பது
நீங்கள் கார்டுகளை வாங்கியவுடன், அவர்கள் பின்வருவற்றைகேட்பார்கள்:
- 16-இலக்க கார்டு எண்
- கிஃப்ட் கார்டு பின் PIN
- கார்டு விவரங்கள் அல்லது ரசீது
5. கிஃப்ட் கார்டுகளை உடனே பயன்படுத்துவார்கள்
மோசடி செய்பவர்கள் உடனடியாக மதிப்பை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மீட்டுக்கொள்ளலாம் அல்லது தள்ளுபடியில் ஆன்லைனில் மறுவிற்பனை செய்யலாம். அது முடிந்ததும், அவர்கள் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடுவார்கள்.
பொதுவான ஆபத்து எச்சரிக்கைகள்:
- கிஃப்ட் கார்டு மூலம் சந்தேகத்திற்கிடமான பேமண்ட் கோரிக்கை செய்யப்பட்டது
- அந்தச் செய்தி அவசரமானதாகவோ, உணர்ச்சிபூர்வமானதாகவோ அல்லது மர்மமானதாகவோ இருக்கலாம்.
- நீங்கள் அதை ரகசியமாக வைத்திருக்கும்படி கேட்கப்படுகிறீர்கள்.
- அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக அல்லாமல் தனிப்பட்ட மின்னஞ்சல் அல்லது சாட் வழியாக தொடர்புகொள்ளப்பட்டால்.
- இலக்கணம், எழுத்துப்பிழை அல்லது பேச்சுத் தொனி தவறாகத் தெரிந்தால்
உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
- உங்களுக்குத் தெரியாத அல்லது நம்பாத எவருடனும் கிஃப்ட் கார்டு குறியீடுகளைப் பகிர வேண்டாம்.
- கிஃப்ட் கார்டுகளுக்கான கோரிக்கைகளை சரிபார்க்கவும், குறிப்பாக அவை வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினால்.
- உடனடியாக அல்லது தவிர்க்க முடியாத கோரிக்கைகள் சக ஊழியர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து வந்தால், அவற்றை எளிதில் நம்பாதீர்கள்.
- கிப்ட் கார்டுகளை உங்கள் தனிப்பட்ட தேவைக்காக மட்டுமே, அதிகாரப்பூர்வ விற்பனை மூலங்களில் இருந்து வாங்க வேண்டும்.”
- நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு அளியுங்கள் – மோசடிக்காரர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்ப அறிவு குறைவானவர்களை இலக்காகக் கொள்கிறார்கள்.
கிஃப்ட் கார்டு மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி புகாரளிப்பது
PhonePe மூலம் மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், பின்வரும் வழிகளில் உடனடியாக நீங்கள் சிக்கலைத் தெரிவிக்கலாம்:
- PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” என்ற விருப்பத்தின் கீழ் ஒரு சிக்கலை எழுப்புங்கள்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: ஒரு சிக்கலை எழுப்ப PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் அழைக்கலாம், அதன் பிறகு வாடிக்கையாளர் சேவை முகவர் ஒரு டிக்கெட்டை உருவாக்கி உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: Phonepe வெப்ஃபார்மை பயன்படுத்தியும் நீங்கள் டிக்கெட் எழுப்பலாம்: https://support.phonepe.com/
- சோசியல் மீடியா: PhonePe-யின் சமூக ஊடகக் கையாளுதல்கள் மூலம் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்.
- Twitter — https://twitter.com/PhonePeSupport
- Facebook — https://www.facebook.com/OfficialPhonePe
- குறைதீர்ப்பு: ஏற்கனவே உள்ள புகாருக்கான குறையைப் புகாரளிக்க நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து முன்னர் எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
- சைபர்செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகிலுள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் செல் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமான நினைவூட்டல் – PhonePe ஒருபோதும் ரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. PhonePe மூலம் வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் phonepe.com டொமைனில் இருந்து வந்திருக்காவிட்டால் புறக்கணிக்கவும். மோசடி என நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொள்ளவும்.