PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டதா? உங்கள் சேமிப்பைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

nidhiswadi|4 min read|03 July, 2025

URL copied to clipboard

இப்போது இரவு 11 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ப்ரெண்ட் உங்களை வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறார், உங்கள் வீட்டுக் கதவைத் திறக்கும் போது தான் ​​உங்கள் தொலைபேசி உங்கள் பாக்கெட்டில் இல்லை என்பதை உணர்கிறீர்கள்! உங்கள் இதயம் கனத்துவிடுகிறது.

பதட்டத்தில் ​​உங்கள் மொபைலை எங்கு விட்டுச் சென்றீர்கள் என்பதை உங்களால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. ஒருவேளை நீங்கள் அதை தியேட்டரில் விட்டிருக்கலாம். ஷாப்பிங் செய்யும் போது கீழே விழுந்திருக்கலாம். அல்லது யாராவது பிக்பாக்கெட் செய்திருக்கலாம்!

உங்கள் மனதில் ஓடுவதெல்லம் மொபைலில் டேட்டாக்களை பற்றிய எண்ணம் தான் – நீங்கள் லாகின் செய்துவைத்துள்ள பேண்ட் மற்றும் பேங்கிங் ஆப்ஸ் மற்றும் உங்கள் நோட்ஸ் ஆப்பில் உள்ள பாஸ்வேர்டுகளை பற்றிய சிந்தனை மட்டுமே உங்கள் மனதில் தோன்றுகிறது.

நீங்கள் பதறுவதில் தவறில்லை. உங்கள் சேமிப்பைப் பாதுகாக்க அடுத்த சில நிமிடங்கள் மிக முக்கியமானவை.

மொபைல் திருட்டு பற்றிய உண்மை

உங்கள் ஸ்மார்ட்போன் இனி வெறும் ஒரு தகவல்தொடர்பு கருவி மட்டும் அல்ல – அது உங்கள் வாலட், உங்கள் வங்கி மற்றும் உங்கள் அடையாளம். திருடர்களுக்கும் இது தெரியும். அவர்கள் உங்கள் மொபைலை வெறும் பண மோசடிக்காக மட்டும் திருடுவதில்லை, ஆனால் அவர்கள் அதை திறந்தவுடன், இன்னும் பலவற்றை அணுகலாம் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள்.

இந்த கட்டுரை சாதனம் திருடப்பட்ட பிறகு நிதி மோசடிகள் எவ்வாறு நிகழ்கின்றன மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு தடுக்கலாம் என்பதை விவரிக்கிறது.

சாதனத் திருட்டுக்குப் பிறகு நிதி மோசடிகள் எவ்வாறு நிகழ்கின்றன

சாதனம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நிதி மோசடிகள் பெரும்பாலும் நவீன டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி செய்யப்படுகின்றன. பின்வரும் சில விஷயங்களை மோசடி செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்:

  1. தானாக உள்நுழைந்த பேமண்ட் ஆப்களான UPI, டிஜிட்டல் வாலட்கள் அல்லது பேங்க் ஆப்கள் போன்றவை, மறு அங்கீகாரம் இல்லாமல் பரிவர்த்தனைகளைத் தொடங்க திருடர்களை அனுமதிக்கின்றன. இது குறிப்பாக சாதனத்தில் வலுவான ஸ்க்ரீன் லாக் அல்லது பயோமெட்ரிக் அல்லது பின் அடிப்படையிலான ஆப் பாதுகாப்புகள் இல்லாதபோது இது சாத்தியமாகிறது.
  1. சேமிக்கப்பட்ட கார்டு விவரங்கள் பிரவுசர்கள் அல்லது ஆப்களில் அங்கீகரிக்கப்படாத பர்சேஸ்களை மேலும் எளிதாக்குகிறது, ஏனெனில் திருடர்கள் சேமிக்கப்பட்ட பேமண்ட் தகவலை எளிதாக அணுகி விடுவார்கள்.
  1. பலவீனமான ஸ்க்ரீன் லாக்குகள், அல்லது அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது, எளிதான சாதன அணுகலை வழங்குவதோடு, அதே சமயம் ஆப்ஸ் சார்ந்த பாதுகாப்புகள் இல்லாததால் முக்கியமான ஆப்கள் பாதுகாப்பற்ற நிலைமைக்குச் செல்கின்றன.
  1. மேலும், திருடர்கள் SIM மாற்ற மோசடியை (SIM ஸ்வாப் அட்டாக்) மேற்கொள்ளலாம். அதாவது, தொலைதொடர்பு நிறுவனங்களை ஏமாற்றி, பாதிக்கப்பட்ட நபரின் மொபைல் எண்ணை புதிய SIMக்கு மாற்றச் செய்து, பரிவர்த்தனை உறுதிப்படுத்தலுக்காக அனுப்பப்படும் ஒன்-டைம் பாஸ்வேர்டுகளை (OTP) கைப்பற்றுகிறார்கள். இந்த வகை மோசடியைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் இந்த வலைப்பதிவை வாசிக்கலாம்.
  1. ஃபிஷிங் தாக்குதல்கள் என்பது இன்னொரு பொதுவான மோசடித் தந்திரம், இதில் மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் தொடர்புகள் அல்லது மின்னஞ்சலை அணுகி அவர்களை போல ஆள்மாறாட்டம் செய்து மற்றவர்களை ஏமாற்றி, முக்கியத் தகவல் அல்லது பணத்தை பகிரச் செய்கிறார்கள். ஃபிஷிங் பற்றி மேலும் அறிய, நீங்கள் இந்த வலைப்பதிவை வாசிக்கலாம்.

இந்த முறைகள் தொழில்நுட்ப மற்றும் மனித பலவீனங்கள் இரண்டையும் பயன்படுத்திக் கொள்கின்றன, இதனால் சாதனத் திருட்டை குறிப்பிடத்தக்க நிதி இழப்புக்கான நுழைவாயிலாக மாற்றுகிறது.

திருட்டை தடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி அறிவது ஏன் முக்கியம்

இந்தியாவில், பெரும்பாலும் பலவீனமான ஸ்க்ரீன் லாக்குகள் அல்லது கண்காணிக்கப்படாத கணக்குகள் போன்ற எளிய கவனக்குறைவுகள் காரணமாக சாதனம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் நிதி மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளன. திருட்டை தடுக்கும் நடவடிக்கைகளை அறிந்து செயல்படுத்துவது பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாக்கவும், நிதி அபாயங்களைக் குறைக்கவும், விரைந்து செயல்பட்டு இழப்புகளைத் தடுக்கவும், அவர்களின் டிஜிட்டல் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவுகிறது.

உங்கள் சாதனத்தை எவ்வாறு பாதுகாப்பது

சாதனம் திருடப்பட்ட பிறகு உங்கள் நிதித் தகவலைப் பாதுகாக்க, இந்த முன்முயற்சி நடவடிக்கைகளைப் பின்பற்றவும்:

  1. வலுவான லாக்குகள் மூலம் உங்கள் சாதனத்தைப் பாதுகாக்கவும்: சிக்கலான பாஸ்வேர்டுகள், பயோமெட்ரிக் அங்கீகாரம் (கைரேகை அல்லது முக அங்கீகாரம்) ஆகியவற்றைப் பயன்படுத்தவும் மற்றும் செயலற்ற நிலைக்குப் பிறகு உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க ஆட்டோ-லாக்கை இயக்கவும். “1234” போன்ற யூகிக்கக்கூடிய பின்களைத் தவிர்க்கவும்.
  1. ஆப்-லெவல் லாக்குகளை அமைக்கவும்: சாதனம் லாக் செய்யப்படாமல் இருந்தாலும், ஆப்ஸைப் பாதுகாக்க, வங்கி மற்றும் பேமண்ட் ஆப்களில் (எ.கா., PhonePe இன் ப்ரொஃபைல் > பாதுகாப்பு > பயோமெட்ரிக் மற்றும் ஸ்க்ரீன் லாக்) கூடுதல் பின்கள் அல்லது பயோமெட்ரிக்ஸை இயக்கவும்.
  1. முக்கியமான தகவல் தானாக சேமிக்கப்படுவதை முடக்குங்கள்: என்க்ரிப்ஷன் இல்லாமல் பிரவுசர்கள் அல்லது ஆப்களில் கார்டு விவரங்கள் அல்லது UPI ஐடிகளை சேமிப்பதைத் தவிர்க்கவும். பாதுகாப்பான சேமிப்பதற்கு நம்பகமான பாஸ்வேர்ட் மேனேஜர்களை பயன்படுத்தவும்.
  1. ரிமோட் டிராக்கிங் மற்றும் டேட்டா வைப்பிங்கை இயக்கவும்: உங்கள் சாதனத்தை தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்க, லாக் செய்ய அல்லது அழிக்க “எனது சாதனத்தைக் கண்டுபிடி” (ஆண்ட்ராய்டு) அல்லது “எனது ஐபோனைக் கண்டுபிடி” (iOS) போன்றவற்றை செயல்படுத்தவும்.
  1. சாப்ட்வேரை அப்டேட் செய்து வையுங்கள்: உங்கள் சாதனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆப்ஸில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய தொடர்ந்து அவற்றை அப்டேட்டடாக வைத்துக்கொள்ளுங்கள்.
  1. சாதனம் தொலைந்ததைப் பற்றி உடனடியாகப் புகாரளிக்கவும்: உங்கள் சிம் கார்டைத் பிளாக் செய்ய உங்கள் தொலைத்தொடர்பு வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும், கணக்குகளை இடைநிறுத்த வங்கிகள் அல்லது வாலட் வழங்குநர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
  1. வங்கி கணக்குகளை கண்காணிக்கவும்: பரிவர்த்தனைகளுக்கான SMS/மின்னஞ்சல் அலர்ட்டுகளை அமைத்து, தினசரி கணக்குகளைச் சரிபார்க்கவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பற்றி உடனடியாகப் புகாரளிக்கவும்.
  1. சாதன பிணைப்பு அம்சங்களைப் பயன்படுத்தவும்: UPI ஆப்ஸ் (எ.கா., PhonePe, Google Pay) சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், சிம் மாற்றப்பட்டாலும் மறு சரிபார்ப்பு தேவைப்படுமாறு அமைக்கவும்.



உங்கள் PhonePe அக்கவுண்ட்டை பிளாக் செய்து பின்னர் அணுகலைப் பெறுவது எப்படி

உங்கள் சாதனம் திருடப்பட்டால், அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க உங்கள் PhonePe அக்கவுண்ட்டை உடனடியாக பிளாக் செய்யவும்:

  • அக்கவுண்ட்டை பிளாக் செய்யும் முறைகள்:
    • கஸ்டமர் கேர் மூலம்: PhonePe சப்போர்ட்டை 80-68727374 அல்லது 022-68727374 என்ற எண்ணில் தொடர்புகொண்டு திருட்டைப் பற்றி புகாரளித்து கணக்கை இடைநிறுத்தக் கோரவும்.
    • வெப்ஃபார்ம் மூலம்: சிக்கலை விவரித்து, PhonePe சப்போர்ட் படிவத்தின் மூலம் டிக்கெட் எழுப்பவும்.
    • சமூக ஊடகங்கள் மூலம்: சம்பவத்தைப் பற்றி புகாரளிக்க Twitter இல் @PhonePeSupport அல்லது Facebook இல் OfficialPhonePe போன்ற அக்கவுண்ட்டுகளை அணுகவும்.
    • சைபர் கிரைம் செல் மூலம்: மோசடி நடந்திருப்பதாக சந்தேகம் இருந்தால், cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும் அல்லது 1930க்கு அழைக்கவும்.
  • மீண்டும் அணுகலைப் பெறுங்கள்:
    • PhonePe சப்போர்ட்டை தொடர்பு கொள்ளவும்: உங்களிடம் புதிய சாதனம் அல்லது சிம் கிடைத்ததும், உங்கள் அடையாளத்தைச்  (எ.கா., பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல் அல்லது KYC விவரங்கள்) சரிபார்க்க சப்போர்ட்டை அழைக்கவும் அல்லது வெப் படிவத்தை பயன்படுத்தவும்.
    • அக்கவுண்ட்டை மீண்டும் சரிபார்க்கவும்: புதிய சாதனத்துடன் உங்கள் அக்கவுண்ட்டை மீண்டும் இணைக்க OTP சரிபார்ப்பு அல்லது KYC மறு சமர்ப்பிப்பை போன்ற PhonePe இன் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    • பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும்: அணுகலை மீண்டும் பெற்ற பிறகு, PhonePe ஆப்பில் (உதவி > பரிவர்த்தனை வரலாறு) உங்கள் பரிவர்த்தனை வரலாற்றை மதிப்பாய்வு செய்து, உதவி > பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது என்பதன் மூலம் அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டைப் பற்றி புகாரளிக்கவும்.
    • குறை தீர்ப்பு: சிக்கல்கள் தொடர்ந்தால், அவற்றை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உங்கள் டிக்கெட் ஐடியுடன் grievance.phonepe.com இல் லாகின் செய்யவும்.

போனஸ் வளங்கள்

  • மற்ற வகையான மோசடிகளைப் பற்றியும், எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றியும் அறிக: இங்கே வாசியுங்கள்.
  • மோசடிகள் எவ்வாறு நிகழ்கின்றன மற்றும் எங்கள் வாடிக்கையாளரைப் பாதுகாக்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவர் விளக்குவதைப் பாருங்கள்: இங்கே காணுங்கள்.

இந்த மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எவ்வாறு புகாரளிப்பது

PhonePe மூலம் மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், பின்வரும் வழிகளில் உடனடியாக நீங்கள் சிக்கலைத் தெரிவிக்கலாம்:

  1. PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” என்ற விருப்பத்தின் கீழ் ஒரு சிக்கலை எழுப்புங்கள்.
  2. PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: ஒரு சிக்கலை எழுப்ப PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் அழைக்கலாம், அதன் பிறகு வாடிக்கையாளர் சேவை முகவர் ஒரு டிக்கெட்டை உருவாக்கி உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
  3. வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: Phonepe வெப்ஃபார்மை பயன்படுத்தியும் நீங்கள் டிக்கெட் எழுப்பலாம்: https://support.phonepe.com/
  4. சோசியல் மீடியா: PhonePe-யின் சோஷியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்.
    1. Twitter — https://twitter.com/PhonePeSupport
    2. Facebook — https://www.facebook.com/OfficialPhonePe
  1. குறைதீர்ப்பு: ஏற்கனவே உள்ள புகாருக்கான குறையைப் புகாரளிக்க நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து முன்னர் எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
  2. சைபர்செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகிலுள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் செல் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: PhonePe ஒருபோதும் உங்கள் ரகசிய தகவல்கள் அல்லது PIN எண்கள் கேட்காது. @phonepe.com என்ற domain இல்லாமல் வரும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். சந்தேகமிருந்தால் உடனே அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுங்கள்.

Keep Reading